Friday 26 January 2018

"ஆஞ்சநேயா' என்று சொல்லலாமா ?

Image result for rama anjaneya

11 ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த ராமர் தன் அவதாரம் முடிந்து விண்ணுலகம் கிளம்பினார். அப்போது அயோத்தியில் உள்ள அனைவரும் அவருடன் வைகுண்டம் புறப்பட்டனர். ஆனால், அனுமன் மட்டும் அதை விரும்பவில்லை. "சுவாமி! வைகுண்டத்தில் நாராயண நாமம் வேண்டுமானால் கேட்கும். ஆனால், இங்கிருந்தால் ராமநாமம் ஜெபிக்கலாம், கேட்கலாம். எனவே எனக்கு வைகுண்டம் வேண்டாம். பூலோகத்தில் இருந்து எப்போதும் ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கிறேன்,'' என்றார். 

இதனால் "நாராயணா' என்ற நாமத்தை விட "ராம' நாமம் உயர்ந்ததாக கருதப்படுகிறது. ஆஞ்சநேயரை வணங்கும் போது வெறுமனே "ஆஞ்சநேயா' என்று அழைக்காமல் "ராம தாச ஆஞ்சநேயா' என்று அழைத்தால் அவர் மிகவும் மகிழ்வார் என்கிறார்கள் மகான்கள்.

No comments:

Post a Comment