பெரும்பாலும் திருமண நாளை ஆங்கில தேதியை அடிப்படையாக வைத்தே கொண்டாடுகிறார்கள். இந்துக்களைப் பொறுத்தவரை திருமணம் நடந்த தமிழ் மாத தேதியன்று இருந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் இந்நாளைக் கொண்டாடுவதே முறையானது என்று "வேங்கடா- ஆபஸ்தம்ப சூத்ரம்' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பஞ்சாங்கம் பார்த்து குறித்துக் கொள்ளலாம். அந்நாளில் தம்பதியர் தங்களுக்கு பிடித்தமான சைவ உணவை சாப்பிட வேண்டும் என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. அன்று புத்தாடை அணிந்து, சுவாமிக்கு நைவேத்யம் படைத்து பூஜிக்க வேண்டும். பெரியவர்களிடம் ஆசி பெறுவதுடன், குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்விக்க வேண்டும்.
Monday 22 January 2018
உங்கள் திருமண நாளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment