Saturday 27 January 2018

தந்தைக்காக தவம்

Image result for thirupparamkunram murugan

கயிலாயத்தில் பார்வதிக்கு, சிவன் பிரணவ மந்திரத்தை உபதேசித்தார். அதை முருகன் மறைவாக இருந்து கேட்டதால் அவருக்கு பாவம் உண்டானது. அதைப் போக்க பூலோகம் வந்து தவத்தில் ஆழ்ந்தார். அவருக்கு சிவனும் பார்வதியும் ரிஷப வாகனத்தில் தைப்பூசத்தன்று காட்சியளித்தனர். இந்த சிவனுக்கு திருப்பரங்குன்றத்தில் சிவாலயம் அமைக்கப்பட்டது. இதை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் என்பர். இக்கோவிலை தரிசித்த பின்னரே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என திருப்பரங்கிரி புராணம் கூறுகிறது. இந்தக் கோவில் சன்னிதி தெருவிலேயே அமைந்துள்ளது. தைப்பூசத்தன்று இங்கு வழிபட்டால் அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment