Saturday 27 January 2018

அம்பாளும் சூரியனும்

Image result for sakthi god

ஆதிசங்கரர் அம்பாளைக் குறித்து "சவுந்தர்ய லஹரி' என்னும் நூல் எழுதினார். அதிலுள்ள ஒரு ஸ்லோகத்தில் "சசி- மிஹிர- வக்ஷோருஹயுகம்' என்ற சொல் வருகிறது. இதற்கு அம்பாள், தனது தனங்களாக (மார்பு) சூரியனையும், சந்திரனையும் கொண்டு உலக உயிர்களுக்கு பாலூட்டுவதாகச் சொல்கிறார். உண்மையும் அதுவே! சூரிய ஒளி இல்லாவிட்டால் தாவரங்கள் இல்லை.

சூரியனின் ஒளிக்கற்றையில் இருந்து தான் தாவரங்கள் தங்களுக்குரிய சத்தைப் பெற்று சேமித்து வைத்துக் கொள்கின்றன. இலை, காய், பழம் என எந்த வகையாக இருந்தாலும் அதில் சத்து இருக்கிறது. இவற்றை நாம் சாப்பிடும் போது கிடைக்கும் சக்தி சூரிய ஒளிக்கற்றையை சேமித்ததாலேயே கிடைக்கிறது. அதாவது, சூரியன் நமக்கு தரும் பிரசாதமாகவே நாம் சாப்பிடும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். தனது தனமான சூரியனின் மூலம், அம்பாள் உலக உயிர்களுக்கு பாலூட்டுகிறாள் என்கிறார் ஆதிசங்கரர். சூரிய, சந்திரரை சிவனின் கண்களாகவும் புராணங்கள் சொல்கின்றன.

No comments:

Post a Comment