Sunday 28 January 2018

நதியாக இருந்து தெய்வமான பெண்


வேத காலத்தில் சரஸ்வதி நதி தெய்வமாக கருதப்பட்டாள். "சரஸ்' என்ற சொல்லுக்கு ஏரி, நீர்நிலை என்பது பொருள். "மகிமை மிக்க சரஸ்வதி மற்ற நதிகளை விட வேகமாகப் பாய்ந்தோடுகிறாள். வெற்றியளிக்கும் தேவதையான அவளை மகரிஷிகள் எல்லாரும் சேர்ந்து துதிக்கிறார்கள்' என்று ரிக் வேதம் சரஸ்வதியைப் போற்றுகிறது. பெரிய அளவில் ஓடிய சரஸ்வதி நதி பிற்காலத்தில் மறைந்தது. தற்போதும் சரஸ்வதி நதி ராஜஸ்தான் மாநிலத்தில் தார் பாலைவனத்தில் பூமிக்கு 1000 அடிக்கு கீழே ஆறாக ஓடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். நதி தெய்வமாக இருந்த சரஸ்வதியை பிற்காலத்தில் கல்வி தெய்வமாக மாற்றினர். இவள் படைப்புக் கடவுளான பிரம்மாவின் துணைவி ஆவாள்.

No comments:

Post a Comment