Monday 29 January 2018

பண வரவிற்கு எளிய பரிகாரம்

பண வரவிற்கு எளிய பரிகாரம்

பணக்கஷ்டத்தால் அவதிப்படுபவர்களின் பிரச்சனை உடனடியாக தீர கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தையும் பரிகார முறையை செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் காலை ஆறு முதல் ஏழு மணிக்குள் அல்லது மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிக்குள் அதுவும் இயலாதோர் இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் கீழ்காணும் பரிகார முறையை செய்து வர திடீர் பண வரவு உண்டாகும். செல்வ நிலை உயரும்.

இருபது மொச்சை கொட்டைகளை சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும். குழைந்து விடக்கூடாது. முழு மொச்சைகளாக தெரிய வேண்டும். அவற்றை ஒரு வெள்ளை துணி அல்லது கைகுட்டையில் இட்டு முடிச்சு அவிழுமாறு லேசாக கட்டிக்கொள்ளவும். பின்பு கீழ்க்கண்ட மந்திரத்தை ஆறு முறை கூறி முடித்து அதை ஓடும் நீர்நிலைகளில் விட்டு விடவும். கைமேல் பலன் தரும் சிறந்த தாந்த்ரீக பரிகாரம் இது.

மந்திரம் :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் 
ஸ்ரீம் கமலே கமலாலயே 
ப்ரஸீத ப்ரஸீத ஸகல 
சௌபாக்யம் தேஹி தேஹி 
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் 
ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ

No comments:

Post a Comment