Saturday 27 January 2018

இவரே முதல்வர்

Related image

திருமாலின் ஆணைப்படி பிரம்மா படைப்புத் தொழிலை தொடங்கினார். முதலில் அண்டங்களை உருவாக்கினார். அவை எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. அதைப் போக்க எண்ணிய போது, திருமாலே காஸ்யப முனிவருக்கும், அதிதிக்கும் ஒளி மிக்க குழந்தையாக அவதரித்தார். மும்மூர்த்தியின் அம்சமான இவர் ஆதியாக (முதன் முதலாக) தோன்றியவர் என்பதால் "ஆதித்யன்' என்று போற்றப்பட்டார். பூலோகத்தில் உயிர்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப வாழ்க்கை நடக்க, நவக்கிரகங்கள் உருவாக்கப்பட்டன. அதில் தலைமைப்பதவி சூரியதேவனுக்கே வழங்கப்பட்டது. நவக்கிரக நாயகராக ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றைச் சக்கரத் தேரில் பூமியை வலம் வரத் தொடங்கினார். அது முதல் பூமியில் பகல், இரவு மாறி மாறி உண்டாகத் தொடங்கியது.

No comments:

Post a Comment