Wednesday 31 January 2018

நந்தியின் அருள் பெற என்ன செய்வது ?


சிவபெருமானுக்கு வாகனமாக இருக்கும் நந்திதேவரின் அருட் பார்வை அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்துவிடாது. நந்தனார் சிவன் மீது அதீத பாசம் கொண்டிருந்தும் கூட கோயிலுக்குள் செல்ல முடியாத அவருக்கு, நீண்ட நாள் சிவதரிசனம் கிடைக்கவில்லை. காரணம் அவர் வாசலை மறைத்துக் கொண்டு இருந்ததால்தான். அதன் பிறகு சிவனின் உத்தரவுக்கு பின் ஒதுங்கிக் கொண்டார்.

சிவனின் வாகனமாகவும், கண்ணிமைக்காமல் பாதுகாப்பவருமான நந்திதேவரின் அருளைப் பெற்றவர்கள் உலகில் எட்டு பேர் தான். 

அவர்கள் தட்சிணாமூர்த்தியின் சீடர்களான சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் மற்றும் சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் ஆகியோர். இந்த அருளாளர்களை பக்தியுடன் வணங்குவோர்க்கு நந்தியின் திருவருள் எளிதில் கிட்டும்.

No comments:

Post a Comment