Friday 26 January 2018

ராமாவதாரத்தில் நரசிம்மரா ?


கம்பராமாயணத்தை கம்பர் ஸ்ரீரங்கம் கோவில், தாயார் சன்னிதி எதிரிலுள்ள மண்டபத்தில் அரங்கேற்றம் செய்தார். அப்போது, அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி குறிப்பிடக்கூடாது என்றனர். 

கம்பர் அவர்களிடம், ""உங்கள் கருத்தை நரசிம்மர் ஏற்பார் என்றால், அதை அவரே நேரில் தோன்றி சொல்லட்டும்!' எனச்சொல்லி திருமாலிடம், "உடனே நரசிம்ம வடிவில் எல்லார் முன்னிலையிலும் எழுந்தருளி, எனது கருத்தை ஆதரிக்க வேண்டும்,'' என வேண்டினார். அப்போது திருமால், நரசிம்ம வடிவில் கர்ஜனையுடன் ஒரு தூணிலிருந்து வெளிப்பட்டார். "கம்பரின் கூற்று உண்மை!' என ஆமோதித்து தலையாட்டினார்.

இந்த நரசிம்மரை "மேட்டழகிய சிங்கர்' என்பார்கள். இவர் தாயார் சன்னிதி அருகில் தனி சன்னிதியில் இருக்கிறார். இவரது கையில் சங்கு மட்டும் இருக்கிறது, சக்கரம் இல்லை.

No comments:

Post a Comment