Friday 27 October 2017

இதைப்படிக்காதீங்க! பால் கிடைக்காது!

Image result for kannan god

கம்சன் கண்ணனைக் கொல்ல, கொடிய அரக்கியான பூதனையை ஏவினான். அவளைக் கண்ட கண்ணன் கண்களை மூடிக் கொண்டான். மலர்ந்த தாமரை மலர் போன்ற தன் கண்களைக் கண்டால், கடவுள் என்பதை அறிந்து கொள்வாள் என மூடிக் கொண்டான். பூதனை, கண்ணனை மார்போடு அணைத்து, பால் கொடுத்தாள். அவனோ, பாலோடு அவள் உயிரையும் குடித்து விட்டான். பூதனை இறந்ததும், ஆயர்பாடி மக்கள், அவளது சிதைக்கு தீ மூட்டினர். கண்ணனின் ஸ்பரிசம் பட்டதால், சிதையில் எழுந்த புகையில் நறுமணம் கமழ்ந்தது. பாகவதத்தில் உள்ள இந்த கதையைப் படித்தாலும், கேட்டாலும் மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறந்து பால் பருகாத முக்தி நிலை அடைவர் என்பது ஐதீகம். பால் கொடுத்த பூதனை, கண்ணன் அருளால் மோட்சம் அடைந்தாள்.

No comments:

Post a Comment