Friday 27 October 2017

இப்படியும் உத்தமர்கள்

Image result for தர்மர்

தீமை செய்தவருக்கும் நன்மை செய்தவரை "உத்தமோத்தமன்' என்பர். அப்படிப்பட்ட குணம் கொண்டவர் பாண்டவர்களில் மூத்தவரான தர்மர். பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்த போது, அவர்களை ஏளனம் செய்யும் விதத்தில், துரியோதனன் பகட்டாக உடையணிந்து தன் பரிவாரங்களோடு வந்தான். பாண்டவர்கள் பார்க்கும் விதத்தில், இனிய பதார்த்தங்களைச் சாப்பிட்டபடியே அலட்சியமாக சிரித்தான். அவனைக் கண்டும் காணாததுபோல தர்மர் அமைதி காத்தார். அதன்பின் துரியோதனன், அடுத்த வனப்பகுதிக்கு சென்றான். அப்பகுதியின் தலைவன் சித்திரசேனனுக்கும், துரியோதனனுக்கும் தகராறு ஏற்பட்டது. சித்திரசேனன் அனைவரையும் மாடு போல பிணைத்துக் கட்டினான். தூதர்களின் மூலம் விஷயம் அறிந்த தருமர், ""என் தம்பிக்கு இப்படியாகி விட்டதே! அவனைக் காப்பாற்றியாக வேண்டுமே!'' என வருந்தினார். பீமனையும், அர்ஜுனனையும் அனுப்பி துரியோதனனைக் காப்பாற்றியதோடு ஆறுதல் சொல்லி வழியனுப்பி வைத்தார். தன்னை ஏளனம் செய்தவனுக்கும் உதவி செய்த தர்மரின் உத்தமகுணம் உலகில் எத்தனை பேருக்கு வரும்!

No comments:

Post a Comment