சிவமைந்தர்களான விநாயருக்கு சித்தி, புத்தி என்ற மனைவியரும்,சுபம், லாபம் என்ற ஆண் குழந்தைகளும், சந்தோஷி என்ற மகளும் பிறந்ததாக வடமாநிலங்களில் நம்புகிறார்கள். தென்னகத்தில், விநாயகர் பிரம்மச்சாரியாக உள்ளார். முருகனுக்கு வள்ளி, தெய்வானை என்ற துணைவியர் இருந்தாலும், குழந்தைகள் பிறந்ததாக புராணத்தில் இல்லை. ஆனால், சாஸ்தாவின் ஒரு வடிவமான சந்தான தாயக சாஸ்தாவுக்கு பிரபா என்ற மனைவியும், சத்யகன் என்ற மகனும் இருந்ததாக "சில்பரத்தினம்' என்ற நூலில் குறிப்பு இருக்கிறது. பொதுவாக, சாஸ்தாவுக்கு பூர்ண, புஷ்கலாவுடன் கூடிய சிலை பல இடங்களில் உள்ளது. ஆனால், பிரபை மற்றும் சத்யகனுடன் கூடிய சிலை இல்லை.இந்தச் சிலை உட்பட மேலும் பல வடிவங்களில் சாஸ்தா சிலை வடிக்கவும், அவற்றை ஒரே கோயில்கட்டி பிரதிஷ்டை செய்யவும் சென்னை வில்லிவாக்கம் விஸ்வநாதசர்மா அஷ்ட சாஸ்தா டிரஸ்ட் முடிவெடுத்துள்ளது.
Sunday 29 October 2017
சென்னையில் அஷ்டசாஸ்தா கோயில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment