Monday 30 October 2017

மதயானையை சாந்தமாக்கிய நரசிம்மர் தீர்த்தம்


ஆந்திராவிலுள்ள அகோபிலம் நரசிம்ம ஆராதனைக்கு பெயர் பெற்றது. இங்கு நாற்பதாவது ஜீயராக இருந்தவர் ரங்கநாத சடகோப யதீந்திர தேசிகர். காரைக்குறிச்சி அழகியசிங்கர் என்று இவரைக் குறிப்பிடுவர். இவர் நரசிம்ம உபாசனையில் தீவிரமாக இருந்தார். திருக்கச்சி நம்பிகள் காஞ்சிபுரம் தேவாதிராஜபெருமாளோடு பேசுவது போல, அகோபிலத்திலுள்ள மாலோல நரசிம்மனோடு பேசுவார். ஒருமுறை, அகோபில மட யானைக்கு மதம்பிடித்தது. அனைவரும் பயந்து ஓடத்துவங்கினர். ஆனால், ஜீயர் தன் கையில் திரிதண்டத்துடன் யானையை நோக்கி நடந்தார். நரசிம்மரின் திருமஞ்சன (அபிஷேகம்) தீர்த்தத்தை அதன் மீது தெளித்தார். யானை ஸ்தம்பித்து நின்றுவிட்டது. பின்னங்கால் இரண்டையும் மடக்கிக் கொண்டு துதிக்கையைத் தூக்கி "நரசிம்ஹா' என்று மூன்றுமுறை கத்தியது. ""என்னடா உனக்கு ஆச்சு!'' என்று அன்போடு தடவிக் கொடுத்து பெருமாள் தீர்த்தத்தை வாயில் கொடுத்தார். தீர்த்த மகிமையால் யானை ஒருநொடியில் சாந்தமாகி விட்டது.

No comments:

Post a Comment