Monday 30 October 2017

அனுமனும் ரகுவம்சம் தான்!


ரகுவம்சத்தில் (சூரியவம்சம்)பிறந்ததால் ராமருக்கு "ரகுராமர்' என்ற பெயர் உண்டு. அவரைப் போலவே, ராமதூதரான அனுமனும் ரகுவம்சத்தில் அவதரித்ததாக அனுமன் சாலீஸா குறிப்பிடுகிறது. துளசிதாசர் இயற்றிய ராமாயணத்தில், சீதையும், ராமரும் தத்தெடுத்துக் கொண்ட பிள்ளையே அனுமன் என்று குறிப்பிடப்படுகிறது. அவர் சீதையைத் தேடி இலங்கை சென்ற போது, சீதை அனுமனைச் "சுத' என்று அழைக்கிறாள். "சுத' என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு "மகன்' என்று பொருள். அனுமனும் சீதாதேவியைத் "தாயே' என்று அழைத்து வணங்குகிறார். அனுமனை ராமரே முதலில் சந்தித்தாலும், தன் மகனாக ஏற்று அன்பு காட்டியவள் சீதையே. இந்த வகையில், அனுமனும் ராமர் பிறந்த ரகுவம்சத்தில் பிறந்தவராகவே கருதப்படுகிறார். இதனை நிரூபிக்கும் விதத்தில் துளசிதாசர் அனுமன் சாலீஸாவில் "ரகுபர' என்று அனுமனைப் போற்றியுள்ளார். இதற்கு "ரகுவம்சத்தில் சிறந்தவர்' என்று பொருள்.

No comments:

Post a Comment