Saturday 28 October 2017

திருக்குறுங்குடி வல்லி நாச்சியார்


திருக்குறுங்குடி தலத்தில் தாயார், குறுங்குடி வல்லி நாச்சியார் என்ற பெயரில் தனியே சந்நதி கொண்டிருக்கிறாள். வராக அவதாரத்தின்போது, தன் பிராட்டியுடன் ஒரு சிறு குடிலில் பகவான் தங்கியிருந்ததாலும், தன் நெடிய உருவத்தைக் குறுக்கிக் கொண்டதாலும் இத்தலம் குறுங்குடி என்றழைக்கப்பட, தாயாரும் குறுங்குடி நாச்சியாரானார். அன்னை, பெருமாளுக்குச் சற்றும் குறைவிலாதபடி அருள் வழங்கி பக்தர்களுக்குப் பவித்திரம் சேர்க்கிறார். வராகரின் மடியில் அமர்ந்தபடி, கைசிக புராணத்தை அவர் சொல்லக்கேட்டுப் பெரிதுவந்து, தானும் பூலோகத்தில் ஏதேனும் ஒரு வகையில் பரந்தாமனின் புகழ் பரப்ப வேண்டுமென்று விரும்பினார், தாயார். 

அதன் விளைவாகவே ஸ்ரீவில்லிப்புத்தூரில், பூமித்தாயின் குழந்தையாக, ஆண்டாளாக அவதரித்தார். அதாவது ஆண்டாளின் அவதாரம் நிகழ இந்த திருக்குறுங்குடி மூல ஆதாரமாக இருந்திருக்கிறது. திருநெல்வேலி நான்குநேரி ஏர்வாடி வழியாக வந்தால் நான்குநேரியிலிருந்து 13 கி.மீ. நான்குநேரிகளக்காடு வழியாகவும், திருநெல்வேலிநாகர்கோவில் பாதையில் வள்ளியூரில் இறங்கியும் வரலாம். கோயில் தொடர்புக்கு: 04635265291; 04635265011; 04635265012; 9443205739; 9443408285.

No comments:

Post a Comment