Monday 30 October 2017

சண்டிகேஸ்வரர் முன் நூல் போடாதீங்க!


சிவனடியார்களில் எப்போதும் தியானத்தில் ஆழ்ந்திருப்பவர் சண்டிகேஸ்வரர். சிவன் கோயிலுக்குச் சென்று, இவரை தரிசிக்காமல் திரும்பினால், கோயிலுக்கு சென்ற பலன் கிடைக்காது என்பது ஐதீகம். வலக்கையின் நடுவிரல்கள் மூன்றையும் இடக்கையால் தட்டுவது போல கையை வைத்து இவரை வழிபட வேண்டும். ஆனால், சத்தம் வரக்கூடாது. சிவதியானம் கலைந்து விடும் என்பதால் இவர் சந்நிதியில் ஒலி எழுப்புவதோ, நூலைப் பிய்த்து போடுவதோ கூடாது. இவரைச் சுற்றி வந்து வழிபடவும் கூடாது. இவர் நாயன்மார்களில் ஒருவர். 12வயது சிறுவனாக இருந்தபோதே சிவனருள் பெற்றவர். பன்னிரு திருமுறைகளில், கண்ணப்பருக்கு அடுத்தபடியாக போற்றப்படுவர் இவர் தான்.

No comments:

Post a Comment