Friday 27 October 2017

சிரித்துச் சிரித்து நம்மைச் சிறையிலிடுபவர்


ஆழ்வார்திருநகரியில் இருந்த புளியமரப்பொந்தை விட்டு எங்கும் போகாதவர் நம்மாழ்வார். எல்லா திவ்யதேசப் பெருமாள்களும், இவர் வாயால் பாசுரம் பெற வேண்டும் என்பதற்காகப் போட்டியிட்டனர். அவருக்கு காட்சியளித்து பாசுரம் பெற்றனர். ஆழ்வார்களில் உட்கார்ந்தபடி காட்சி தருபவர் இவர் மட்டுமே. ஸ்ரீரங்கத்தில் நடக்கும் மார்கழி அத்யயன உற்ஸவத்தில், எல்லா ஆழ்வார்களும் நம்மாழ்வார் சந்நிதியைத் தேடி எழுந்தருள்வர். அதன் பின்னர், நம்மாழ்வார் அவர்களோடு சேர்ந்து கிளம்புவார். ""எப்போதும் சிரித்த முகத்துடன் இதழில் புன்னகை ததும்ப காட்சி தருபவர் கிருஷ்ணர். மறந்தும் அவரை சோகமாகப் பார்க்க முடியாது. அவருடைய அவதாரத்தில் ஏற்பட்ட சந்தோஷ அனுபவத்தை எல்லாம் ஒன்றாக்கி, அதற்கு உருவம் கொடுத்தால் அதுவே நம்மாழ்வார்,'' என்கிறார் பராசரபட்டர். சிரிப்பால் நம்மை ஈர்த்து, தன் மனச்சிறையில் அடைத்து வைப்பவர் இந்த ஆழ்வார். 

No comments:

Post a Comment