Monday 23 October 2017

சேலரி அட்வான்ஸ் பெற்ற முதல் கூலியாள்


வேலை செய்வதற்கு முன்பே பணத்தைப் பெறுவது,"அட்வான்ஸ் பேமென்ட்'. இப்படி வாங்கிய முதல் ஆள் யார் தெரியுமா? மதுரை சொக்கநாதர் தான். வெள்ளம் பெருக்கெடுத்தோடிய வைகையின் கரையை அடைக்க வீட்டுக்கொரு ஆள் வரும்படி மன்னர் உத்தரவிட்டார். 

வந்தி என்னும் சிவபக்தை, முதுமை காரணமாக, தனக்கு பதிலாக, அங்கு வந்த ஒரு வேலையாளை அனுப்பினாள். வந்தது சிவன் என அவளுக்குத் தெரியாது. ""தம்பி! எனக்காக கரையடைக்கச்செல். நான் விற்கும் பிட்டை கூலியாக வாங்கிக் கொள்,'' என்றாள். அவளைச் சோதிக்க எண்ணிய சிவன், வேலையைத் தொடங்கும் முன்னே கூலி தரும்படி கேட்டார். அவளும் சம்மதித்து சூடான பிட்டைக் கொடுத்தாள். சிவனும் வாயில் போட்டுக் கொண்டு ஆனந்தப் பெருக்கில் கூத்தாடினார். "சேலரி அட்வான்ஸ்' வாங்குவது எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது. 

No comments:

Post a Comment