சென்னை பாரிமுனையில் இருந்து 9 கி.மீ., தூரத்திலுள்ள திருவொற்றியூரில் எல்லையம்மன் கோயில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், அங்கு வசித்த மக்களை அம்மை தாக்கியது. ஊரைவிட்டு வெளியேற மக்கள் முடிவெடுத்தனர். அப்போது பெரியவர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்மன், ""நான் உங்களைக் காப்பாற்றுகிறேன். யாரும் என் எல்லையை தாண்டிச் செல்ல வேண்டாம்,'' என்று வாக்களித்தாள். இதனால், இவளுக்கு "எல்லையம்மன்' என பெயர் வந்தது. பங்குனியில் நடக்கும் ஐந்து நாள் விழாவில், அம்மனுக்குக் காப்பு கட்டி பொங்கலிடுவர். தீச்சட்டி ஏந்தி வழிபாடு செய்வர். தன்னை நாடி வந்தவர்க்கு இல்லை என்று மறுக்காமல் அருளை வாரி வழங்குவதால் இந்த அம்மனுக்கு "இல்லையம்மன்' என்றும் பெயர் உண்டு. சுனாமி வந்த போது இப்பகுதி மக்களுக்கு சிரமம் வராமல் பாதுகாத்தவள் இவளே என்கின்றனர் பக்தர்கள்.
Sunday 29 October 2017
இல்லை என மறுக்காத எல்லையம்மன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment