Thursday 26 October 2017

முருகனின் திருவடி உயர்வு


எந்த தெய்வமாக இருந்தாலும் முகங்கள் பல, திருவடி இரண்டு மட்டுமே இருக்கும். முருகனுக்கு ஆறு முகம். பக்தன் எங்கெல்லாம் அழைக்கிறானோ, அங்கெல்லாம் திரும்பிப் பார்க்க பன்னிரண்டு கண்கள். அவனது கடைக்கண் பார்வை பட்டாலே போதும், நினைத்தது நடந்து விடும். கேட்டது கிடைத்து விடும். ஆனால், அவனையே வேண்டுமென கேட்கிறார்கள் அடியார்கள். அது அவ்வளவு சாதாரணமான விஷயமா என்ன! இருந்தாலும், தன்னையே தர அவர் தயாராக இருக்கிறார். 

அதற்கு அவரது திருவடியைத் தான் கெட்டியாகப் பிடிக்க வேண்டும். அருணகிரியார் தனது திருப்புகழில், அவனது திருவடி தரிசனத்தையே கேட்கிறார். காரணம் பிறப்பற்ற நிலையை அடைய! பக்தன் உலக வாழ்வை வெறுத்து, மனதார அவனது திருவடியில் ஐக்கியமாக வேண்டும் என உருகிக் கேட்டால், அந்த வரத்தை நிச்சயம் தருவான்.

No comments:

Post a Comment