Thursday 26 October 2017

முருகனுக்கும் முந்தியவர்


முருக வழிபாட்டுக்கும் முந்தியதாக சாஸ்தா வழிபாடு கருதப்படுகிறது. கந்தபுராணத்தில் இதற்கான ஆதாரம் உள்ளது. சூரபத்மனுக்கு அஞ்சிய தேவேந்திரன், பூலோகத்திலுள்ள வேணுபுரத்தில் (சீர்காழி) மனைவி சசிதேவியோடு மறைந்து வாழ்ந்தான். கைலாயம் சென்று சிவனிடம் முறையிடுவதற்காக தேவர்கள் இந்திரனை அழைத்துச் சென்றனர். தனியே இருந்த சசிதேவிக்கு பாதுகாப்பாக சாஸ்தாவை நியமித்தார். சூரபத்மனின் தங்கை அஜமுகி, சசியைத் துன்புறுத்த வேணுவனம் வந்தாள். அப்போது அவளை சாஸ்தா விரட்டியடித்தார். இதில் இருந்து முருகன் அவதரிப்பதற்கு முன், சாஸ்தா வழிபாடு இருந்ததை அறிய முடிகிறது.

No comments:

Post a Comment