
பாண்டவர்கள், ஆச்சார்யர்கள் அனைவரும் கூடியிருந்த அவையில் திரவுபதியை கவுரவர்கள் மானபங்கம் செய்தனர். அப்போதுஅவள், ""ஹே! கிருஷ்ணா! ரக்ஷமாம் சரணாகதாம்!' என்று அழுதாள். இரண்டு கைகளையும் குவித்து, கோவிந்த நாமத்தை ஜெபித்தாள். இழுக்க இழுக்க வண்ண வண்ண ஆடைகள் தொடர்ந்து வரத்தொடங்கின. ""கிருஷ்ணாவதாரத்தில் திரவுபதியை உடனடியாக காப்பாற்றாமல் விட்டது என் குறை தான். திரவுபதிக்கு ஆடை கிடைத்ததற்குக் கூட நான் காரணமில்லை. கோவிந்த நாமமே காரணம்,'' என்று பகவானே ஒத்துக் கொண்டார். குறைவில்லாமல் ஆடை உடுத்த கிருஷ்ண நாமத்தைச் சொல்லுங்கள்.
No comments:
Post a Comment