Tuesday 31 October 2017

மண்சுமந்த "ஆசுதோஷி'


பக்தர்களின் எளிய பிரார்த்தனைக்குக் கூட மகிழ்ச்சி அடைந்து விரைவில் அருள்புரிவதால், சிவனுக்கு "ஆசுதோஷி' என்ற சிறப்புப் பெயருண்டு. இவர் 64 திருவிளையாடல்களைப் புரிந்த தலம் மதுரை. மற்ற தலங்களில் சிவனின் திருப்பாதம் மண்ணில் பட்டது. ஆனால், மதுரை மண்ணைச் சிவனே தன் தலையில் தாங்கி நின்றதுடன், இந்த மண்ணை அரசாட்சியும் செய்தார். வந்தியம்மை என்னும் பக்தைக்காக கூலியாளாக வந்த இவர் பிட்டுக்காக மண் சுமந்தார். இவரது தேவியான மீனாட்சி சந்நிதியில் வழிபட்ட பின்னரே, சுந்தரேஸ்வரர் என்னும் பெயர் கொண்ட இவரது சந்நிதிக்குச் செல்லும் வழக்கம் இருக்கிறது.

No comments:

Post a Comment