சென்னை சூளைமேட்டில் உள்ள பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் மிகவும் பழமையானது.ஏராளமான மகான்கள், அடியார்கள்,சித்தர்கள் திருவடி பட்ட தலம். இங்கு மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது நெற்றியிலிருந்து தீப்பொறி வெளிப்பட்டது. ஆகவே இது அக்னி தலமாக கருதப்படுகிறது. தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், திருவோண நட்சத்திர நாட்களில் கருடசேவை நடத்துகின்றனர். சின்ன கருட வாகனத்தில் பவனி வரும்பெருமாள் பக்தர்கள் தேங்காய் நெய்தீபம் ஏற்றியும் வேண்டுதல் வைக்கிறார்கள். தன்வந்திரி,லட்சுமி ஹயக்கிரீவர், தட்சிணாமூர்த்தி சந்நிதிகளும் உள்ளன. அஸ்த நட்சத்திரம் அன்றும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் அர்ச்சனை செய்வது விசேஷம். கோயிலினுள் அரசமர வேர் விநாயகர் போல தோற்றமளிக்கிறது. சுயம்பு அரசமர விநாயகராக அவர் போற்றப்படுகிறார்.
Monday 30 October 2017
பெருமாள் நெற்றியில் அக்னி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment