Friday 27 October 2017

உன் பாட்டுக்கு நான் அடிமையப்பா!


கர்நாடகத்தில் உள்ள திருநாராயணபுரத்தில் சம்பத்குமாரர் என்ற திருநாமத்தோடு பெருமாள் அருள்புரிகிறார். இங்குள்ள உற்சவருக்கு "செல்லப்பிள்ளை' என பெயர். ராமானுஜர் "இதோ! என் செல்லப்பிள்ளை!' என்று இவரை அழைத்ததால் இப்பெயர் ஏற்பட்டது. சோமயாஜியாண்டான் என்ற பக்தர் செல்லப்பிள்ளையைப் பாடி மகிழ்வது வழக்கம். அவருடைய பக்திக்கு மயங்கிய பெருமாள், நேரில் வந்து ஆடத் தொடங்கினார். 

ஒருநாள் பெருமாள் ஆடி முடித்ததும், "சுவாமி! எனக்கு மோட்சம் கொடுங்கள்,'' என்று கேட்டார். 

""நீர் பாடினீர்! நான் ஆடினேன்! பாட்டுக்கு ஆட்டம் சரியாகி விட்டது. இதைக் கொண்டு மோட்சம் கேட்பது நியாயமா? மோட்சம் பெற விரும்பினால் ராமானுஜரின் திருவடியைப் பிடித்துக் கொள்,'' என்றார். குரு இல்லாமல் இறையருளைப் பெற முடியாது என்பதை இதன் மூலம் உலகிற்கு உணர்த்தினார். "பாஷ்யக்காரர்' என்னும் பெயருடன் ராமானுஜர் தனி சந்நிதியில் இங்கு வீற்றிருக்கிறார்.

No comments:

Post a Comment