Saturday 9 December 2017

பணக் கஷ்டம் தீர வேண்டுமா? வெள்ளிக்கிழமைகளில் இதைச் செய்யுங்கள்

Prayer

உங்களுக்கு இருக்கின்ற கஷ்டம் இருந்த இடம் தெரியாமல் போக வேண்டும் என்றால், இதை மட்டும் தொடர்ந்து செய்து வாருங்கள்....அப்பறம் பாருங்கள் நீங்களும் கோடிஸ்வரர் தான். 

• செல்வத்திற்கு உரிய மகாலட்சுமியைத் தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமைகள் வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.

• வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்திற்குத் தேவையான பசும்பாலை வழங்கினால் பண வரவு உண்டாகும். பச்சை வளையலைத் தாயாருக்கு அணிவித்திட செல்வம் பெருகும்.

• சுக்கிர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சிக்க தனலாபம் கிடைக்கும். இதை வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டும். 

• வெள்ளிக்கிழமையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபம் ஏற்றி, 11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும். மேலும், மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்கச் செல்வம் சேரும்.

• தினந்தோறும் உங்களின் குல தெய்வத்தை காலையில் பிரார்த்தனை செய்து வர வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.

• வியாழக்கிழமை மாலை 4 முதல் 5 மணி வரை உள்ள நேரம் குபேர காலமாகும். அதனால் இந்நேரத்தில் இல்லத்தில் குபேரனை வழிபட்டு வர பண வரவு அதிகரிக்கும்.

• தாமரை திரி போட்டுக் குபேரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் பண வரவு அதிகரிக்கும். 

• அமாவாசையில் நம் முன்னோர்கள் இறந்த திதியில் தானம் செய்திட தனலாபம் உண்டாகும்.

• வீட்டில் திருப்பதி வெங்கடாஜலபதியுடன் பத்மாவதி தாயார் உள்ள படத்தை வைத்து வழிபட்டு வந்தால் பண வரவு அதிகமாகும்.

• சுத்தமான நீரில் வாசனைத் திரவியம் கலந்து இருவேளைகளிலும் லட்சுமி மந்திரம் கூறியபடி வீடு முழுவதும் தெளித்திட செல்வம் சேரும்.

• கனகதாரா தோத்திரம் ஸ்ரீசுக்தம் படிப்பதன் மூலமும், அவரவர் நட்சத்திர மூலிகையை பணப்பெட்டியில் வைப்பதன் மூலமும் பண வரவுக் கூடும்.

• ஓடும் வெள்ளைக்குதிரை, ஜோடி கழுதைப் படம் ஆகியவற்றை அடிக்கடி பார்த்து வர பண வரவு அதிகமாகும்.

• வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்த்தால் பணத்தட்டுப்பாடு நீங்கும். ஆந்தையை வழிபட்டால் பண வரவு உண்டாகும் மற்றும் ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வந்தால் செல்வ வளம் அதிகரிக்கும்.

• ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்து வந்தால் செல்வங்கள் பெருகும். மேற்கூறியவற்றை இடைவிடாது செய்து உங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment