Friday 1 December 2017

தந்தைக்கு சமமான ஆசிரியர்


மிதிலைக்கு ராமரை அழைத்துச் சென்றார் விஸ்வாமித்திரர். சீதையின் தந்தை ஜனகரிடம் அவரை அறிமுகப்படுத்தினார். ராமன் பிறந்த சூரியவம்சத்தின் பெருமையைச் சொன்னார். அவரது முன்னோரான சூரியன், மநு, ப்ருது, இக்ஷ்வாகு, ககுஸ்தன், மாந்தாதா, பகீரதன், ரகு என்று எல்லாருடைய வீர தீரப் பிரதாபங்களை அடுக்கினார். தசரதர் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் பலனாக ராமன் பிறந்ததைக் கூறினார். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, ""இந்த ராமன் தசரதருக்குப் பெயரளவில் மட்டுமே புத்திரன். 

ராம சகோதரர்கள் நால்வரையும் வளர்த்த பெருமை, அவர்களது குலகுரு (ஆசிரியர்) வசிஷ்டரையே சாரும்,'' என்று புகழ்ந்தார். "ப்ரச்நோபநிஷத்' என்னும் உபநிஷதத்தில் சீடர்கள், ""த்வம் ஹி ந: பிதா'' என்று சொல்லி குருவை வணங்கினர். இதற்கு "நீங்கள் அன்றோ எங்களின் தந்தை' என்று பொருள். இந்த ஸ்லோகத்தின் அடிப்படையிலும், விஸ்வாமித்திரரின் சொல்லின் அடிப்படையிலும் ஆசிரியரும் தந்தை ஸ்தானத்துக்கு சமமானவர் என்பது தெளிவாகிறது.

No comments:

Post a Comment