Sunday 1 October 2017

நான்கு வாசலிலும் நால்வர்


கோயில் என்றால் அது சிதம்பரத்தையே குறிக்கும். தரிசிக்க முக்தி தரும் தலமான சிதம்பரத்தில், நடராஜர் மீது, சமயக்குரவர்களாகிய சம்பந்தர், அப்பர் (திருநாவுக்கரசர்), சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பதிகம் பாடியுள்ளனர். இவர்கள் நால்வரும் நான்குகோபுர வாசல்வழியாக வந்து தரிசனம் செய்துள்ளனர். கிழக்கு கோபுரம் வழியாக மாணிக்கவாசகரும், தெற்கில் ஞானசம்பந்தரும், மேற்கில் அப்பரும், வடக்கு கோபுரம் வழியே சுந்தரரும் கோயிலுக்குள் நுழைந்தனர் என தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள நான்கு ரத வீதிகளிலும் அங்கப்பிரதட்சணம் செய்த பிறகே, அப்பர் சிதம்பரம் கோயிலுக்குள் நுழைந்தார். 

No comments:

Post a Comment