Tuesday 17 October 2017

ஜெகதீசன் திருவடி சரணம்

ஜெகதீசன் திருவடி சரணம்

நமச்சிவாய என்னும் மந்திர சொரூபம் வாழ்க. இறைவனைக் காட்டிலும் இறைவனுடைய நாமத்திற்கு மகிமை அதிகம்.

நமச்சிவாய என்னும் மந்திர சொரூபம் வாழ்க. அந்த ஐந்தெழுத்தின் பொருளாக இருக்கும் இறைவனும், இந்த உலகத்தில் அனைத்துமாகவும், அதில் ஊடுருவியிருந்து அதை ஆள்கின்ற ஜெகதீசன் திருவடி வாழ்க. இறைவனைக் காட்டிலும் இறைவனுடைய நாமத்திற்கு மகிமை அதிகம்.

நம சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழியாண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க!
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க!

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்கு சேயோந்தன் பூங்கழல்கள் வெல்க!

No comments:

Post a Comment