Thursday 12 October 2017

பெற்றோரின் நடுவில் முருகன்


முருகனை நடுவில் வைத்து சிவனும், பார்வதியும் கொஞ்சி மகிழும் கோலத்தை சோமாஸ்கந்த வடிவம் என்பர். 

பாலமுருகன் உலகைச் சுற்றி வந்த பிறகும், அவருக்கு கனி கிடைக்கவில்லை. ஞானத்தை தரும் கனி என்பதால், அந்த ஞானப்பண்டிதன் மற்றொரு ஞானக்கனியைப் பெற வேண்டும் என்பதில் ஆவலாக இருந்தார். ஒரு முறை தந்தையிடம் கரிய நிறத்தில் நாவல்பழம் போல் கழுத்தில் உருண்டையாக தங்கியிருக்கும் விஷத்தைக் கேட்டு அடம் பிடித்தார். சிவன், விஷம் என்று எடுத்துக்கூறியும், குழந்தை முருகன் கேட்கவில்லை. தந்தையின் கழுத்தை பிடித்து இழுத்து, விஷ உருண்டையை வெளியே கொண்டு வர முயற்சித்தார். சிவன் குழந்தையின் பிடி தாங்காமல் மூச்சு திணறினார். அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி, முருகனை தன் மடியில் இருத்தி ஞானப்பால் ஊட்டி பார்வதி அமைதிப்படுத்தினாள். இதுவே சோமாஸ்கந்தர் கோலமானது. திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இந்த வடிவத்தை காணலாம்.

No comments:

Post a Comment