Saturday 14 October 2017

படியேறி சாமி கும்பிடுங்க! பலனை அள்ளுங்க!


இப்போது கைலாஷ், சபரிமலை போன்ற கடினமான யாத்திரைகளை பக்தர்கள் மேற்கொள்கின்றனர். திருப்பதியில் பாதை வசதி ஏற்படுவதற்கு முன், பக்தர்கள் மலையேறியே சென்றனர். சபரிமலையில் இப்போதும் பம்பையில் இருந்து சந்நிதானம் வரை நடந்தே செல்ல வேண்டியுள்ளது. பழநி உள்ளிட்ட முருகன் கோயில்களுக்கு படியேறிச் செல்கிறார்கள். பசித்த பிறகு சாப்பிட்டால் தான், உணவு உடலில் ஒட்டும். அதுபோல, கஷ்டப்பட்டு யாத்திரை செய்தால் தான் தரிசனபலன் பூரணமாக மனிதனுக்கு கிடைக்கும். இதன் காரணமாகவே இறைவன் மலைகளிலும், காடுகளிலும் பதுங்கியிருக்கிறான். ஒரு காலத்தில் ஜோதிர்லிங்கத் தலமான ஸ்ரீசைலத்துக்கு போவது என்றால் மிகவும் கடினம். ""செல்லலுற அரிய சிவன் சீபர்ப்பத மலை' என்கிறார் சுந்தரர். "சீபர்ப்பதம்' என்பது ஸ்ரீசைலத்தைக் குறிக்கும். "பர்வதம்' என்றால் "மலை'. இதையே பர்ப்பதம் என்றார் சுந்தரர். "ஸ்ரீ' என்பதையே தமிழில் "சீ' என்றார். மலைக் கோயில்களுக்குச் செல்ல போக்குவரத்து வசதி இருந்தாலும், வலுவான உடல்நிலை உள்ளவர்கள் மலையேறி தரிசனம் செய்து வாருங்கள். அதிக பலனை அடைவீர்கள்

No comments:

Post a Comment