Friday 6 October 2017

ஆட்டையாம்பட்டியில் தூளியம்மனுக்கு வளையல் அலங்காரம்


ஆட்டையாம்பட்டி:  ஆட்டையாம்பட்டியில் தூளியம்மனுக்கு வளையல் அலங்காரம் நடைபெற்றது. ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள பாப்பாரப்பட்டி திருமணி முத்தாற்றின் குறுக்கே, சோலையப்பன் தூளியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வளையல் அலங்காரம் செய்வது வழக்கம். இதை தொடர்ந்து நேற்று பெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்து திருக்கல்யாண நிகழச்சி நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு 16 வகை மூலிகைகளால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து பக்தர்கள் அம்மனுக்கு வளையல்களை அணிவித்து தரிசனம் செய்தனர். பின்னர் நடந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment