சென்னை ராஜாஅண்ணாமலைபுரம், சுந்தரம் கோயிலிலுள்ள புட்டபர்த்தி சாய்பாபா படங்களில் இருந்து திருநீறு கொட்டுகிறது. மும்பையில் "சத்யம்', ஐதராபாத்தில் "சிவம்', சென்னையில் "சுந்தரம்' ஆகிய சாய்பாபா கோயில்கள் எழுப்பப்பட்டன. 1981 ஜனவரி 19ல், சுந்தரம் கோயிலின் கும்பாபிஷேகத்தை பாபா நடத்தி வைத்தார்.
சாய்பாபா சென்னைக்கு 65 முறை வந்துள்ளார். 2007ல் சென்னை திருவான்மியூரில் அதிருத்ர மகாயாகம் பத்து நாட்கள் நடந்தது. அப்போது, சுந்தரத்தில் தங்கியிருந்து பக்தர்களுக்கு நேரடியாக அருளாசி வழங்கியது தான் அவர் கடைசியாக சுந்தரத்திற்கு வந்தருளியதாகும். இங்கு வியாழன்,ஞாயிறுகளில் சிறப்பு பூஜை நடக்கும்.
சாய்பாபா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நாளான 2010, மார்ச் 28 முதல் சுந்தரத்தில் உள்ள சாய்பாபா படத்தில் இருந்து திருநீறு கொட்ட ஆரம்பித்தது. அவர் சித்தியடைந்த ஏப்ரல் 24 முதல் மற்றொரு படத்தில் இருந்தும் கொட்டியது. இந்த திருநீறு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப் படுகிறது.
No comments:
Post a Comment