
பலகையில் உட்காருங்கள். கால்கள் தரையில் படலாம். பலகையில் கால் இருக்க வேண்டும் என்பதில்லை. பூமியோடு தொடர்பு வேண்டும். அதே சமயம் நம்மிடம் சேமிக்கும் தவம் குறையக் கூடாது. பலகையில் உட்காரும்போது சேமித்த வலிமை பூமியில் இறங்காது. அதேசமயம் கால் பூமியில் இருப்பதால் அதன் தொடர்பும் கிடைத்துவிடும். இருக்கை திடமாகவும், சுகமாகவும் அமைய இந்த முறை சிறப்பாக இருக்கும். செய்யும் காரியத்தில் ஈடுபாடு சிதறாமல் இருக்க பலகை அவசியம். பண்டைய காலத்தில் ஆமை வடிவில் பலகை அமைந்திருக்கும். கால்களையும் சேர்த்து வைக்கும் படியான அகலம் அதில் தென்படாது.
No comments:
Post a Comment