Saturday 29 July 2017

பூனை பூஜை


புளகன் என்னும் அசுரனுக்கு நினைத்த வடிவம் எடுக்கும் ஆற்றல் இருந்தது. ஒருநாள், புனுகுப் பூனையாக மாறிய அசுரன், திருவண்ணாமலை கோவில் கருவறைக்குள் சென்றான். பூனையின் உடம்பிலிருந்து வெளி வரும் புனுகு என்னும் நறுமணப் பொருளைச் சிதற விட்டான். 

இந்த புண்ணிய செயலின் காரணமாக, அந்த அசுரனுக்கு ஆற்றல் அதிகரித்தது. ஆணவத்தால் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினான். இதைத் தாளாத தேவர்கள், சிவனிடம் முறையிட்டனர். அவர்களின் துயர் துடைக்க சிவன் விரும்பினாலும், வாசனை திரவியம் அளித்த புளகாசுரனைக் கொல்ல விரும்பவில்லை. மாறாக, சொர்க்க பதவி அளிக்க முடிவெடுத்தார். 

அதன்படி அசுரனின் முன் தோன்றிய அண்ணாமலையார், ""புனுகுப் பூனையாக மாறி தொண்டு செய்த நீ உயிரை விடும் நேரம் வந்து விட்டது,'' என்றார்.

"இறைவா! நான் உயிரை விடுவதற்கு அஞ்சவில்லை. ஆனால், அதற்கு முன் என் விருப்பத்தை கேளுங்கள். உமக்கு வாசனைத் திரவியமான புனுகு சாத்தும் வழிபாடு எப்போதும் இங்கு நடக்க வேண்டும். "புழுகணி ஈசன்'(புனுகு அணிந்த சிவன்) என்னும் சிறப்பு பெயரும் உமக்கு வழங்க வேண்டும்,'' என்று கேட்டுக் கொண்டு உயிர் நீத்தான். 

இதன்படி அண்ணாமலையாருக்கு, பூனையின் நினைவாக சந்தன அபிஷேகத்தின் போது புனுகு சாத்தும் வழக்கம் இப்போதும் உள்ளது.

No comments:

Post a Comment