Monday 31 July 2017

என்ன நடக்குமோ அது பாபாவின் ஆணைப்படியே நடக்கும்


பக்தனின் கரைகாணாத அன்பும் அசையாத நம்பிக்கையால் பாபா குதுகலம் அடைகிறார் அவரே காரியங்களை செய்பவரும் செய்விப்பவரும் ஆவார். செயல்புரியும் அதிகாரத்தை பாபாவின் கைகளில் ஒப்படைத்துவிட்டு பூரண சரணாகதி அடையுங்கள். என்ன நடக்குமோ அது பாபாவின் ஆணைப்படியே நடக்கும். பக்தர்களில் எவரெல்லாம் முழுமையான சரணடைகிறார்களோ, அவர்கள் எல்லோருடைய நன்மையையும் கருதி சாயி அவர்களை சன்மார்க்கத்தில் செலுத்துகிறார், பக்தனை கொண்டாடுகிறார். அளவற்ற புண்ணியத்தின் பலத்தால் மட்டுமே ஒருவர் சாயியின் தர்பாருக்குள் வரமுடியும். வந்தவர்கள், யாரையும் வெறும் கையுடன் பாபா அனுப்புவதில்லை. 

சாயி சாயி  என்று அவருடைய திவ்ய நாமத்தை நாம் கூறும்பொழுது அவர் நம் கண்ணிற்கு புலப்படாமல் அவர் அங்கேயே இருக்கிறார். இது சத்தியம். அவர் தனது சக்தியையும், நிலையையும் நமக்கு தெய்வீக அற்புதங்கள் மூலம் நிரூபித்துக் காட்டுகிறார். ஒருவருடைய வழிபாட்டு நிலை எப்படியோ, அப்படியே அவருக்குக் கிடைக்கும் நித்திய அனுபவமும் அமைகிறது. தம்மளவில் சூட்சுமமாக இருந்த போதிலும், நம்மை அவர்பால் வசிகரித்து இழுக்கிறார். பக்தியுடன் தன்னை வணங்குபவர்களை பாதுகாப்பவர். அவருடைய இதயத்தில் கனிந்த அபரிமிதமான அன்பை கெட்டியாகப் பற்றிகொள்வோமாக! அவருடைய மார்க்கத்தை நன்கு புரிந்துகொண்டு காரிய சாதனை பெறுவோமாக! பாபாவின் பாதங்களிலேயே சித்தம் நிலைக்க வேண்டும். 

No comments:

Post a Comment