Saturday 1 July 2017

மூலஸ்தானத்தை கருவறை என்பது ஏன் தெரியுமா ?

தொடர்புடைய படம்

சுவாமி இருக்கும் மூலஸ்தானத்தை கருவறை என்கிறார்கள். கரு என்ற சொல் குழந்தை உருவாவதை மட்டும் குறிப்பதில்லை. ஒரு கதை எழுதுவதற்குக்கூட கரு வேண்டும். ஒரு கோயிலின் அடித்தளமாக பிரதிஷ்டை செய்யப்படும் பிரதான மூர்த்தியின் இருப்பிடத்தை கருவறை என்று குறிப்பிடுகின்றனர். நல்ல கருவை அடித்தளமாகக் கொண்டு எழுதப்படும் கதை, மக்களிடம் சென்று சேர்ந்தால் உலகம் திருந்துகிறது. கருவறையில் இருக்கும் மூலமூர்த்தியை வழிபட்டால் நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை உண்டாகிறது. ஆன்மிக உணர்வால் உலகமே அமைதியாக இருக்கிறது என்ற அடிப்படையில் மூலஸ்தானத்தை கருவறை என்று அழைத்தனர்.

No comments:

Post a Comment