Wednesday 5 July 2017

பலன் தரும் ஸ்லோகம் : (தீராத நோய்கள் தீர)



ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக
ப்ரணாஸகர்த்ரே முனிவந்திதாய
ப்ரபாகரேந்த்வக்நி விலோசனாய
ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய.
ஸ்ரீவைத்யநாதாஷ்டகம் 

பொதுப் பொருள்: 

உச்சிமுதல் பாதம் வரை ஏற்படக் கூடிய அனைத்து நோய்களையும் முற்றிலுமாகப் போக்கும் பேரருள் பெற்றவர் வைத்யநாதஸ்வாமி. எல்லா மகரிஷிகளாலும் வணங்கப்படுபவர். சூரியன், சந்திரன் இருவரையும் தன் இரு கண்களாகவும், அக்னி பகவானை தன் மூன்றாவது கண்ணாகக் கொண்டிருக்கும் வைத்யநாதரை வணங்குகிறேன். 

(இந்தத் துதியை நோய்களால் அவதிப்படுபவர்களும், நோய்கள் அணுகாமல் தங்களைக் காத்துக் கொள்ள நினைப்பவர்களும் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை அன்றும் பாராயணம் செய்து வந்தால் நற்பலன் கிட்டும்.)

No comments:

Post a Comment