Saturday 1 July 2017

பலன் தரும் ஸ்லோகம் : (தீயவை அகற்றும் திருப்புகழ்)

தொடர்புடைய படம்



அபகார நிந்தைபட் ... டுழலாதே
அறியாத வஞ்சரைக் ... குறியாதே
உபதேச மந்திரப் ... பொருளாலே
உனைநானி னைந்தருட் ... பெறுவேனோ
இபமாமு கன்தனக் ... கிளையோனே
இமவான்ம டந்தையுத் ... தமிபாலா
ஜெபமாலை தந்தசற் ... குருநாதா
திருவாவி னன்குடிப் ... பெருமாளே.
திருவாவினன்குடி திருப்புகழ் 

பொருள்:  

பிறருக்குச் செய்த தீமைகளினால் நிந்தனைக்கு ஆளாகி அலையாமலும், நன்னெறியை அறியாத வஞ்சகர்களிடம் சேராமலும், நீ எனக்கருளிய உபதேச மந்திரத்தின் பொருளையே துணையாகக் கொண்டு உன்னையே நான் நினைந்து உன் திருவருளைப் பெற மாட்டேனோ? யானையின் முகத்தை உடைய விநாயகன் தனக்குத் தம்பியானவனே இமயராஜன் மகளாம் (பார்வதி என்னும்) உத்தமியின் பிள்ளையே ஜெபம் செய்யக்கூடிய மாலையை எனக்களித்த நல்ல குருநாதனே திருவாவினன்குடி என்னும் பதிக்குப் பெருமாளே. 

(இத்துதியை ஒவ்வொரு விசாக நட்சத்திர தினத்தன்றும் பாராயணம் செய்து வந்தால் நம் வாழ்வில் குறுக்கிடும் தீயவை அகலும். முருகப் பெருமானின் திருவருள் கிட்டும்.)

No comments:

Post a Comment